ம்..
விடைபெற்றுப் பிரியும்
இறுக்கமான தருணங்களில்
பிரயாசையுடன் நேர்ப்பார்வை தவிர்த்தாலும்
தழுதழுக்கும் குரலில் தொக்கி நிற்கிறது
சொல்ல நினைத்த ஏதோ ஒன்று
தெருக்குழாய்த் தாழின்
வலஞ்சுழித் திருகல் மீறி
தயங்கியொழுகும் ஒற்றைத்துளியென..
*
காத்திருப்பு
அலுவலக மென்பொருளில்
அவசரப்பணி நிகழ்த்துகையில்
குறுக்குவழித் தொடுப்பு ஒற்ற
மணற்கடிகை காட்டி வெறுப்பேற்றும்
கணித்திரையின் எந்திர தயக்கத்தை
அலுத்துக்கொள்ளும் தருணங்களில்
என்றேனும் நினைத்துப்பார்த்ததுண்டா
வகுப்பில் தான் பெற்ற
நட்சத்திரக்குறியை காண்பிக்க
இரவு வரை காத்திருந்து
துயிலிடை விசித்தழும்
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்க மறந்த மகவை?
*
இரவு
சாலையோர செம்புலத்தில்
பெய்யெனப் பெய்து தேங்கிய
நேற்றைய மழையின் சகதியில்
கலங்கலாய் மிதக்கும் நிலவை
வேகமாய் அரைத்துச் சென்று
கிறீச்சிட்டு நிறுத்தப்படும் ஊர்தியிலிருந்து
யுகங்களின் களைப்புடன்
மிகை ஒப்பனையிட்ட பேரிளம்பெண்கள்
உதிர்க்கப் படுகிற
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
இரவின் அழுக்குத்துணி முனையில்
முடிந்துவைக்கப் படுகின்றன
உறங்காப் பெருநகரின்
கறைபடிந்த சில்லறைக்காசுகள்..
*
கோடை!
இரண்டாம் யாமத்தில்
இயற்கை அழைப்பு உந்த
விழித்தெழுந்த பொழுதில்
சாம்பல்நிற இருளில்
மின்விசிறியின் சுழற்சியினூடே
விட்டுவிட்டுத் தெரிந்த
பிறைநிலா பற்றி
நான் எழுதிக்கொண்டிருக்கும்
இக்கவிதையை
தேய்வழக்கு* எனச்
சொல்லப்போகும் அன்பர்களே,
தயவு செய்து அதனை
அந்த இரவிடம்
போய்ச் சொல்லுங்கள்..
*Cliché
*
இரை
அடுக்குமாடி சீமாட்டி வீசியெறிந்த
நெகிழிக் குப்பையில்
இரைக்கான நிகழ்தகவை கண்ணுற்ற
உற்சாக தருணத்தில்
இறுகப்பற்றுகிறது கொடிக்கயிற்றை
இன்னுமொரு வசந்தத்தையும்
பெரு நகரில் கழிக்கச்
சபிக்கப்பட்ட காகம்..
*
முதுமை
உதிரியாய் வீழ்கிற
கனவுகளைப் பொருட்படுத்தாது
எதிர்பார்ப்பின் நாரில் தொடுத்த
இழப்பதற்கு எதுவுமற்ற
முதுமை வாழ்வை
முழங்களில் அளக்கிறாள்
பேரங்களில் படியாது
விலகிச் செல்லும் விதியை
மவுனமாய்ச் சபித்தபடி..
*
பூ
பூத்திருந்த தடயத்தை
சிறுகச்சிறுக இழந்திடும்
நேற்றைய பூவின்
சுருளும் இதழ்கள்
கொடுங்கனவுகளில் உழலும் முதிர்கன்னியின்
கண் கீழ்க் கருவளையமென..
*
இலை
வசந்தத்தின் துவக்கத்தில்
நிறையுடலியாய் உருமாறி
அயல்செடிகளில் மகரந்தம் ஆய்கிற
ஒளிர்வர்ண பட்டாம்பூச்சிகளை
மயிர்க்கொட்டி பருவத்திலேயே
அறிந்திருக்கக் கூடும்
பச்சையத்தில் உயிர்த்திருக்கும்
பாதி இலைகள்..
*
.
வளையோசை ஒததிசைவை
சமீபததில தொலைதத
நகபபூசசு உதிரநத விரலகள
விசையொறறி தடடெழுதிய
கவிதையில காணவிலலை
ஒறறெழுததுகளை
விடைபெற்றுப் பிரியும்
இறுக்கமான தருணங்களில்
பிரயாசையுடன் நேர்ப்பார்வை தவிர்த்தாலும்
தழுதழுக்கும் குரலில் தொக்கி நிற்கிறது
சொல்ல நினைத்த ஏதோ ஒன்று
தெருக்குழாய்த் தாழின்
வலஞ்சுழித் திருகல் மீறி
தயங்கியொழுகும் ஒற்றைத்துளியென..
*
காத்திருப்பு
அலுவலக மென்பொருளில்
அவசரப்பணி நிகழ்த்துகையில்
குறுக்குவழித் தொடுப்பு ஒற்ற
மணற்கடிகை காட்டி வெறுப்பேற்றும்
கணித்திரையின் எந்திர தயக்கத்தை
அலுத்துக்கொள்ளும் தருணங்களில்
என்றேனும் நினைத்துப்பார்த்ததுண்டா
வகுப்பில் தான் பெற்ற
நட்சத்திரக்குறியை காண்பிக்க
இரவு வரை காத்திருந்து
துயிலிடை விசித்தழும்
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்க மறந்த மகவை?
*
இரவு
சாலையோர செம்புலத்தில்
பெய்யெனப் பெய்து தேங்கிய
நேற்றைய மழையின் சகதியில்
கலங்கலாய் மிதக்கும் நிலவை
வேகமாய் அரைத்துச் சென்று
கிறீச்சிட்டு நிறுத்தப்படும் ஊர்தியிலிருந்து
யுகங்களின் களைப்புடன்
மிகை ஒப்பனையிட்ட பேரிளம்பெண்கள்
உதிர்க்கப் படுகிற
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
இரவின் அழுக்குத்துணி முனையில்
முடிந்துவைக்கப் படுகின்றன
உறங்காப் பெருநகரின்
கறைபடிந்த சில்லறைக்காசுகள்..
*
கோடை!
இரண்டாம் யாமத்தில்
இயற்கை அழைப்பு உந்த
விழித்தெழுந்த பொழுதில்
சாம்பல்நிற இருளில்
மின்விசிறியின் சுழற்சியினூடே
விட்டுவிட்டுத் தெரிந்த
பிறைநிலா பற்றி
நான் எழுதிக்கொண்டிருக்கும்
இக்கவிதையை
தேய்வழக்கு* எனச்
சொல்லப்போகும் அன்பர்களே,
தயவு செய்து அதனை
அந்த இரவிடம்
போய்ச் சொல்லுங்கள்..
*Cliché
*
இரை
அடுக்குமாடி சீமாட்டி வீசியெறிந்த
நெகிழிக் குப்பையில்
இரைக்கான நிகழ்தகவை கண்ணுற்ற
உற்சாக தருணத்தில்
இறுகப்பற்றுகிறது கொடிக்கயிற்றை
இன்னுமொரு வசந்தத்தையும்
பெரு நகரில் கழிக்கச்
சபிக்கப்பட்ட காகம்..
*
முதுமை
உதிரியாய் வீழ்கிற
கனவுகளைப் பொருட்படுத்தாது
எதிர்பார்ப்பின் நாரில் தொடுத்த
இழப்பதற்கு எதுவுமற்ற
முதுமை வாழ்வை
முழங்களில் அளக்கிறாள்
பேரங்களில் படியாது
விலகிச் செல்லும் விதியை
மவுனமாய்ச் சபித்தபடி..
*
பூ
பூத்திருந்த தடயத்தை
சிறுகச்சிறுக இழந்திடும்
நேற்றைய பூவின்
சுருளும் இதழ்கள்
கொடுங்கனவுகளில் உழலும் முதிர்கன்னியின்
கண் கீழ்க் கருவளையமென..
*
இலை
வசந்தத்தின் துவக்கத்தில்
நிறையுடலியாய் உருமாறி
அயல்செடிகளில் மகரந்தம் ஆய்கிற
ஒளிர்வர்ண பட்டாம்பூச்சிகளை
மயிர்க்கொட்டி பருவத்திலேயே
அறிந்திருக்கக் கூடும்
பச்சையத்தில் உயிர்த்திருக்கும்
பாதி இலைகள்..
*
.
வளையோசை ஒததிசைவை
சமீபததில தொலைதத
நகபபூசசு உதிரநத விரலகள
விசையொறறி தடடெழுதிய
கவிதையில காணவிலலை
ஒறறெழுததுகளை