சார்பு
வாழ்வெனும் நெடுவழித்தடத்தில்
தற்செயலாய் சந்திக்க நேர்ந்த
ஸ்நேகம் மிகு சகபயணிக்கு
இவ்வழிப்போக்கன் வரையும்
தன்னிலை விளக்கமிது..
உம்மீது சாந்தி நிலவுக;
இறையருளும் பொலிவும் நிறைக!
உமதன்புக்கும் பரிவுக்கும்
மிக்க நன்றி..
மேலும்,
திகட்டத் திகட்டப் பொழிகிற
உயர்வுநவிற்சி மிகுந்த புகழுரைகட்கும்
உத்தியோகப் பற்றற்ற
உடல்மொழிச் செய்திகட்கும்
இன்னும்,
சொல்லி முடித்த
சொல்ல நினைத்த
சகலவித வார்த்தைகட்கும்
எனது உளங்கனிந்த நன்றியறிதல்கள்..
நிற்க;
இத்தருணத்தில் நானுமக்கு
உணர்த்த விழையும்
யதார்த்தமொன்றுளது:
நீங்களனைவரும் விதந்துரைத்து
இல்லாத கிரீடத்துக்கு
இறகு செருக முனைந்தாலும்
அடியேன் இதற்கெல்லாம்
அருகதையற்றவன்
அன்றியும்
நானொன்றும் பிறவி மேதையோ
நடமாடும் கலைக்களஞ்சியமோ
அல்லன்..
கொஞ்சம் ரசனை
கொஞ்சம் திமிர்
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் கோபம்
மிதமாய் மென்சோகம்
சராசரிக்கும்
சற்று அதிகமாகவே
அலட்சியம் என
கலவையாய்த் திரிபவன்
சாமான்யன்..
எனது நட்பு வட்டத்திலேயே
இந்த ரகத்தில்
மூவர் தேறுவர்:
ஒருவன் பட்டறை கரும்புகையிலும்
மற்றவன் பாலை தேசத்து மணற்புழுதியிலும்
பொருளியல் பரிபாஷையின் படி
'கீழுழைப்பில்' உழல
தற்செயலாய் ஒளிவட்டத்துள் நுழைந்த இன்னொருவனான எனை மாத்திரம்
வியத்தலும் நயத்தலும் என்ன ந்யாயம்?
என் தொழின்முறை முகமூடியா?
குமிழ்பசையாய் மென்றுமிழும் ஆங்கிலமா?
(அல்லது,
சமகாலப் பிரச்னைகளனைத்தினதும்
பின்னணியாய்ச் சாடப்படுகிற
உலகப் பொருளாதாரச் சரிவா?)
உமது அளவீடுகளின் சுட்டெண்
எதனைச் சார்ந்தது?
யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கையில்
ஒன்று மட்டும் புலனாகிறது
சர்வநிச்சயமாய்..
என் மீதான ஈர்ப்பு உட்பட
அனைத்து கருதுகோள்களுக்குப் பின்னாலும்
எளிய தத்துவமொன்றுளது:
காலம் வெளி
சூழ்நிலை பொருண்மை
ஆழம் அகலம்
நிறை எண் திசை
அறிவு திறன்
அருமை தெரிவு
லாபம் நஷ்டம்
நான் நீ
―சகலமும் சார்புக்குட்பட்டதே!
வாழ்வெனும் நெடுவழித்தடத்தில்
தற்செயலாய் சந்திக்க நேர்ந்த
ஸ்நேகம் மிகு சகபயணிக்கு
இவ்வழிப்போக்கன் வரையும்
தன்னிலை விளக்கமிது..
உம்மீது சாந்தி நிலவுக;
இறையருளும் பொலிவும் நிறைக!
உமதன்புக்கும் பரிவுக்கும்
மிக்க நன்றி..
மேலும்,
திகட்டத் திகட்டப் பொழிகிற
உயர்வுநவிற்சி மிகுந்த புகழுரைகட்கும்
உத்தியோகப் பற்றற்ற
உடல்மொழிச் செய்திகட்கும்
இன்னும்,
சொல்லி முடித்த
சொல்ல நினைத்த
சகலவித வார்த்தைகட்கும்
எனது உளங்கனிந்த நன்றியறிதல்கள்..
நிற்க;
இத்தருணத்தில் நானுமக்கு
உணர்த்த விழையும்
யதார்த்தமொன்றுளது:
நீங்களனைவரும் விதந்துரைத்து
இல்லாத கிரீடத்துக்கு
இறகு செருக முனைந்தாலும்
அடியேன் இதற்கெல்லாம்
அருகதையற்றவன்
அன்றியும்
நானொன்றும் பிறவி மேதையோ
நடமாடும் கலைக்களஞ்சியமோ
அல்லன்..
கொஞ்சம் ரசனை
கொஞ்சம் திமிர்
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் கோபம்
மிதமாய் மென்சோகம்
சராசரிக்கும்
சற்று அதிகமாகவே
அலட்சியம் என
கலவையாய்த் திரிபவன்
சாமான்யன்..
எனது நட்பு வட்டத்திலேயே
இந்த ரகத்தில்
மூவர் தேறுவர்:
ஒருவன் பட்டறை கரும்புகையிலும்
மற்றவன் பாலை தேசத்து மணற்புழுதியிலும்
பொருளியல் பரிபாஷையின் படி
'கீழுழைப்பில்' உழல
தற்செயலாய் ஒளிவட்டத்துள் நுழைந்த இன்னொருவனான எனை மாத்திரம்
வியத்தலும் நயத்தலும் என்ன ந்யாயம்?
என் தொழின்முறை முகமூடியா?
குமிழ்பசையாய் மென்றுமிழும் ஆங்கிலமா?
(அல்லது,
சமகாலப் பிரச்னைகளனைத்தினதும்
பின்னணியாய்ச் சாடப்படுகிற
உலகப் பொருளாதாரச் சரிவா?)
உமது அளவீடுகளின் சுட்டெண்
எதனைச் சார்ந்தது?
யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கையில்
ஒன்று மட்டும் புலனாகிறது
சர்வநிச்சயமாய்..
என் மீதான ஈர்ப்பு உட்பட
அனைத்து கருதுகோள்களுக்குப் பின்னாலும்
எளிய தத்துவமொன்றுளது:
காலம் வெளி
சூழ்நிலை பொருண்மை
ஆழம் அகலம்
நிறை எண் திசை
அறிவு திறன்
அருமை தெரிவு
லாபம் நஷ்டம்
நான் நீ
―சகலமும் சார்புக்குட்பட்டதே!
No comments:
Post a Comment