கவிமூலம்
ஆதி இரவில்
இருள் பூசிக்கொண்ட
அடர்வனத்துள்
நுழையும் சிற்றோடை
அவிழும் பூக்களின்
மகரந்தத்துணுக்குகளை
காவிச்சென்றதில்
தாழ்நிலத்தில் உருவாகிற
நந்தவனம் போன்று
மிகவும் தற்செயலானது
கவிதை..
*
மழை
ஏக காலத்தில்
உள்ளும் புறமும்
நனைத்துவிடுகிறது
ஒவ்வொரு தடவையும்
மிகப் புதிதாய் பெய்கிற
மழை..
மழை என்பது
சிலர் நினைவில்
மண்வாசனை,
சிலர் நினைவில்
இடி-மின்னல்,
சிலர் நினைவில்
சிற்றுண்டியுடனான தேநீர்,
சிலர் நினைவில்
ஒழுகும் கூரை,
சிலர் நினைவில்
தேளோ புற்றீசலோ..
வெகு சிலர் நினைவில் அது
காகித ஓடம் விட்டு
கழிபேருவகை எய்திய
பால்யத்தின் கவிதை..
*
காரணம்
பெயர் தெரியாப் பட்சியிலிருந்து
உதிர்ந்த ஒற்றை இறகே,
உன்னை இங்கு
கொண்டு வந்து சேர்த்தது எது?
கண்டம் தாண்டிய
நெடும்பயணத்தின் களைப்பா?
கார்காலக் கலவியின்
பட்சிகள்.. தேவதைகள்.. யட்சிகள்..
பால்யத்தின் கனவுகளில் தோன்றி
உயிர் வருடிச் சென்ற
பட்சிகளினதும், தேவதைகளினதும் முகங்கள்
இன்று முற்றாக மறந்துபோய்
மூளியாகி விட்டன..
திறந்த இமைகளிலிருந்து
பறந்த பட்சிகள்
புலன் எட்டா புனல் மிசை
புலம்பெயர்ந்ததாய்க் கேள்வி..
யந்திர யட்சிகளது பிடியில் சிக்கி
சிறகுகள் துருவேறி விட்டிருக்கும் தேவதைகளுக்கோ
இது கட்டாய ஓய்வு காலம்..
முதுசம்
அறை சுத்தம் செய்ய நேர்ந்த
அரிதான பொழுதொன்றில்
யதேச்சையாய்க் கண்டெடுத்த
மணிப்ரவாள நூலின்
நாய்ச்செவி முளைத்த
பழுப்பேறிய ஏடுகளின் நடுவே
உறங்குகிறது
இன்னமும் குட்டி போடாத
கடந்த நூற்றாண்டின்
மயிலிறகொன்று...
*
விரகம்
ஏகாந்த நிசி வரை
உயிர் வருடும்
உன் நினைவுகளில்
திளைத்துக் களைத்தபின்
வரும் கனவிலும் நீ
—பாழும் மாளிகையில் எஞ்சிய
மணல்கடிகாரத்தின்
குவளைகளை நிரப்பிவிடுகிற
சாசுவதமான துகள்கள் போன்று!
*
மீட்டல்
பேருந்தின் புறப்பாட்டில்
ஸ்ருதி மாறித் தேயும்
மென்சோகம் கவிகிற
தெருப்பாடகன் கானத்தின்
செவிப்புலன் எட்டாத
அடுத்து வரும் வரிகள்
நெடிய பயணத்தின்
மீதி நாழிகை முழுதும்
அகச்செவி அலைவரிசைகளில்
ரீங்கரிப்பதென
ஆதி இரவில்
இருள் பூசிக்கொண்ட
அடர்வனத்துள்
நுழையும் சிற்றோடை
அவிழும் பூக்களின்
மகரந்தத்துணுக்குகளை
காவிச்சென்றதில்
தாழ்நிலத்தில் உருவாகிற
நந்தவனம் போன்று
மிகவும் தற்செயலானது
கவிதை..
*
மழை
ஏக காலத்தில்
உள்ளும் புறமும்
நனைத்துவிடுகிறது
ஒவ்வொரு தடவையும்
மிகப் புதிதாய் பெய்கிற
மழை..
மழை என்பது
சிலர் நினைவில்
மண்வாசனை,
சிலர் நினைவில்
இடி-மின்னல்,
சிலர் நினைவில்
சிற்றுண்டியுடனான தேநீர்,
சிலர் நினைவில்
ஒழுகும் கூரை,
சிலர் நினைவில்
தேளோ புற்றீசலோ..
வெகு சிலர் நினைவில் அது
காகித ஓடம் விட்டு
கழிபேருவகை எய்திய
பால்யத்தின் கவிதை..
*
காரணம்
பெயர் தெரியாப் பட்சியிலிருந்து
உதிர்ந்த ஒற்றை இறகே,
உன்னை இங்கு
கொண்டு வந்து சேர்த்தது எது?
கண்டம் தாண்டிய
நெடும்பயணத்தின் களைப்பா?
கார்காலக் கலவியின்
பரவசமா?
வசந்தம் பல கண்டு
எய்திய மூப்பா?
அல்லது
மலைவாசஸ்தலத்துக்கு
விடுமுறையில் வந்தவனது
துப்பாக்கியா?
வசந்தம் பல கண்டு
எய்திய மூப்பா?
அல்லது
மலைவாசஸ்தலத்துக்கு
விடுமுறையில் வந்தவனது
துப்பாக்கியா?
*
பட்சிகள்.. தேவதைகள்.. யட்சிகள்..
பால்யத்தின் கனவுகளில் தோன்றி
உயிர் வருடிச் சென்ற
பட்சிகளினதும், தேவதைகளினதும் முகங்கள்
இன்று முற்றாக மறந்துபோய்
மூளியாகி விட்டன..
திறந்த இமைகளிலிருந்து
பறந்த பட்சிகள்
புலன் எட்டா புனல் மிசை
புலம்பெயர்ந்ததாய்க் கேள்வி..
யந்திர யட்சிகளது பிடியில் சிக்கி
சிறகுகள் துருவேறி விட்டிருக்கும் தேவதைகளுக்கோ
இது கட்டாய ஓய்வு காலம்..
*
முதுசம்
அறை சுத்தம் செய்ய நேர்ந்த
அரிதான பொழுதொன்றில்
யதேச்சையாய்க் கண்டெடுத்த
மணிப்ரவாள நூலின்
நாய்ச்செவி முளைத்த
பழுப்பேறிய ஏடுகளின் நடுவே
உறங்குகிறது
இன்னமும் குட்டி போடாத
கடந்த நூற்றாண்டின்
மயிலிறகொன்று...
*
விரகம்
ஏகாந்த நிசி வரை
உயிர் வருடும்
உன் நினைவுகளில்
திளைத்துக் களைத்தபின்
வரும் கனவிலும் நீ
—பாழும் மாளிகையில் எஞ்சிய
மணல்கடிகாரத்தின்
குவளைகளை நிரப்பிவிடுகிற
சாசுவதமான துகள்கள் போன்று!
*
மீட்டல்
பேருந்தின் புறப்பாட்டில்
ஸ்ருதி மாறித் தேயும்
மென்சோகம் கவிகிற
தெருப்பாடகன் கானத்தின்
செவிப்புலன் எட்டாத
அடுத்து வரும் வரிகள்
நெடிய பயணத்தின்
மீதி நாழிகை முழுதும்
அகச்செவி அலைவரிசைகளில்
ரீங்கரிப்பதென
அகாலத்தில் மீளெழுகிற
நினைவுத்துணுக்குகள்
பிரயத்தனம் ஏதுமின்றி
மனசு நிரப்பும் மௌனமாய்..
அரூபவெளியின் அச்சிலிருந்து புறப்பட்டு
முடிவிலியின் முனை நோக்கி நீளும்
சூன்யத்தின் நெடிய ரேகையைக்
கண்டதுண்டா என்றாள்.
இல்லை எனப் பகர்ந்த என்னை
எள்ளி நகையாடி
அதுதான் விடை எனச்சொல்லி
தேய்ந்து மறைந்தாள்..
தியரி
விடுமுறைக் காலத்து விஜயங்களின்
உச்சபட்ச சாகசமாய்
சிக்னல் விழக் காத்திருந்து
தண்டவாளத்தில் வைத்தெடுக்கும்
ஐந்து பைசா இடறி
தடம் புரளும் ரயில் என
பயமுறுத்திச் சொன்ன
தாய்வழிப் பாட்டிக்கு
'பட்டாம்பூச்சி விளைவு'* பற்றி
தெரிந்திருந்ததோ ஒருவேளை?!
*butterfly effect
நினைவுத்துணுக்குகள்
பிரயத்தனம் ஏதுமின்றி
மனசு நிரப்பும் மௌனமாய்..
*
நேர்முகம்
"Ignorance is bliss.."
கிடைக்காத வேலைகளின்
நேர்முகங்களின் பொழுதான
நெடுநேரக் காத்திருப்புகளில்
வெறித்த பார்வையிலேயே
பரிச்சயமாகி விடுகிற
வரவேற்பறை ஓவியத்தின்
பசும்புல் மேயும் மான்களின்
கபடமில்லா விழிகளை நோக்குகையில்
பால்யத்தின் புதிர்கள்
அவிழ்க்கப்படாமலேயே
நேர்முகம்
"Ignorance is bliss.."
கிடைக்காத வேலைகளின்
நேர்முகங்களின் பொழுதான
நெடுநேரக் காத்திருப்புகளில்
வெறித்த பார்வையிலேயே
பரிச்சயமாகி விடுகிற
வரவேற்பறை ஓவியத்தின்
பசும்புல் மேயும் மான்களின்
கபடமில்லா விழிகளை நோக்குகையில்
பால்யத்தின் புதிர்கள்
அவிழ்க்கப்படாமலேயே
இருந்திருக்கலாமோ என
எண்ணத் தோன்றும்..
முகங்கள்
எந்திர யுகத்தின்
ஆதர்ச பிரஜையாய்
இரவல் கனவுகளில்
முற்றிலுமாய் சுயம் தொலைத்து
முடிவிலி நோக்கி
விலகிச்செல்லும் கானலை
துரத்திக்களைத்தபின்
சடுதியாய் ஒரு புள்ளியில்
போலி முகம்
கழற்றுகிற போது தான்
உணர்கிறோம்
நமதான முகம்
எப்போதோ
வெற்றிடைவெளி ஆகிவிட்டதென்பதை..
*
வெறுமை
இருத்தலுக்கான நெருக்குதலில்
அனிச்சையாய் தாழ் நெகிழ்த்தி
திறந்து கொள்கிறது
ஞாபக யன்னல்..
புறத்தே விரிகிற
ஏக்கப் பெருவெளியை
வெறித்து வெய்துயிர்க்க
கவியும் வெறுமையில்
நிழலெனப் படரும்
பிரிவின் இருண்மை
தனக்குள் புதைத்துக் கொள்கிறது
நாளைய நிச்சயமின்மைகளை..
*
ஙே?!
எண்ணத் தோன்றும்..
*
முகங்கள்
எந்திர யுகத்தின்
ஆதர்ச பிரஜையாய்
இரவல் கனவுகளில்
முற்றிலுமாய் சுயம் தொலைத்து
முடிவிலி நோக்கி
விலகிச்செல்லும் கானலை
துரத்திக்களைத்தபின்
சடுதியாய் ஒரு புள்ளியில்
போலி முகம்
கழற்றுகிற போது தான்
உணர்கிறோம்
நமதான முகம்
எப்போதோ
வெற்றிடைவெளி ஆகிவிட்டதென்பதை..
*
வெறுமை
இருத்தலுக்கான நெருக்குதலில்
அனிச்சையாய் தாழ் நெகிழ்த்தி
திறந்து கொள்கிறது
ஞாபக யன்னல்..
புறத்தே விரிகிற
ஏக்கப் பெருவெளியை
வெறித்து வெய்துயிர்க்க
கவியும் வெறுமையில்
நிழலெனப் படரும்
பிரிவின் இருண்மை
தனக்குள் புதைத்துக் கொள்கிறது
நாளைய நிச்சயமின்மைகளை..
*
ஙே?!
அரூபவெளியின் அச்சிலிருந்து புறப்பட்டு
முடிவிலியின் முனை நோக்கி நீளும்
சூன்யத்தின் நெடிய ரேகையைக்
கண்டதுண்டா என்றாள்.
இல்லை எனப் பகர்ந்த என்னை
எள்ளி நகையாடி
அதுதான் விடை எனச்சொல்லி
தேய்ந்து மறைந்தாள்..
*
தியரி
விடுமுறைக் காலத்து விஜயங்களின்
உச்சபட்ச சாகசமாய்
சிக்னல் விழக் காத்திருந்து
தண்டவாளத்தில் வைத்தெடுக்கும்
ஐந்து பைசா இடறி
தடம் புரளும் ரயில் என
பயமுறுத்திச் சொன்ன
தாய்வழிப் பாட்டிக்கு
'பட்டாம்பூச்சி விளைவு'* பற்றி
தெரிந்திருந்ததோ ஒருவேளை?!
*butterfly effect
*
No comments:
Post a Comment